search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஆம்பூர், வாணியம்பாடியில் 2 மணி நேரம் கொட்டிய மழை

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. 2 மணி நேரம் பெய்த கன மழையால் சலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது.

    மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி பட்டனர்.

    மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆம்பூரில் 68,4 மி.மீ வாணியம்பாடியில் 87மி.மீ மழை பெய்தது.

    Next Story
    ×