என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்18 Sep 2021 10:13 AM GMT (Updated: 18 Sep 2021 10:13 AM GMT)
பாபநாசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேல ரஸ்தா தெருவில் வசித்து வந்த அய்யாபிள்ளை மகன் மனோஜ் என்கிற விக்னேஸ்வரன் (வயது 24) கடந்த மாதம் தனது நண்பர்களுடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பாபநாசத்தை சேர்ந்த மண்டையன் என்ற தினேஷ் (25), நந்தகுமார் (21), முகிலன் (20) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தினேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேல ரஸ்தா தெருவில் வசித்து வந்த அய்யாபிள்ளை மகன் மனோஜ் என்கிற விக்னேஸ்வரன் (வயது 24) கடந்த மாதம் தனது நண்பர்களுடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பாபநாசத்தை சேர்ந்த மண்டையன் என்ற தினேஷ் (25), நந்தகுமார் (21), முகிலன் (20) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் தினேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X