search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்
    X
    பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின்

    143வது பிறந்தநாள்- பெரியார் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

    பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    பெரியாரின் 143-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    பெரியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, ஆவடி நாசர், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், சுப்புலட்சுமி ஜெகதீசன், தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன், முன்னாள் பகுதி செயலாளர் சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் பா.சிதம்பரம் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


    Next Story
    ×