என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி செப்டம்பர் 17ல் பதவி ஏற்கிறார்
Byமாலை மலர்13 Sep 2021 8:15 PM GMT (Updated: 13 Sep 2021 8:15 PM GMT)
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் இன்று பஞ்சாப் புறப்பட்டுச் செல்கிறார்.
சென்னை:
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி பொறுப்பு ஏற்றார். இவர், பஞ்சாப் மாநில ஆளுநராக சில தினங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து பஞ்சாப் புறப்பட்டுச் செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் அவரை வழியனுப்பி வைக்க உள்ளனர்.
இதற்கிடையே, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆர்.என்.ரவி நாளை மறுதினம் சென்னை வருகிறார். தமிழகத்தின் 15-வது ஆளுநராக அவர் செப்டம்பர் 17ம் தேதி அன்று பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X