என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்காயத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்7 Sep 2021 10:11 PM GMT (Updated: 7 Sep 2021 10:11 PM GMT)
நரசிங்கபுரம், புலுகூர்பள்ளி கிராமங்களில் தொழிலாளர்களை தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமையில், நரசிங்கபுரம், புலுகூர்பள்ளி கிராமங்களில் தொழிலாளர்களை தேடிச்சென்று தடுப்பூசி போடப்பட்டது.
இந்த பணிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி பானுமதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா மற்றும் சுகாதாரத் துறையினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X