search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் மெய்யநாதன்
    X
    மானியக்கோரிக்கை விவாதத்திற்கு முன்னதாக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் மெய்யநாதன்

    சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு- சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு

    ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

    சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், ஆயிரம் விளக்கு பகுதியில் பசுமை பூங்கா அமைத்து, சாலை வசதியை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.
    Next Story
    ×