search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருச்சி காந்தி மார்க்கெட், உறையூரில் லாட்டரி விற்ற 4 பேர் கைது

    திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் உறையூர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    திருச்சி:

    திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் உறையூர் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட் மற்றும் உறையூர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் அருண் பாட்ஷா, முபாரக் அலி, வெங்கடாசலபதி, வேல்முருகன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பதற்கு பயன்படுத்திய துண்டு சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×