search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lottery sold"

    • கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    ராயபுரம்:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா ஒரு நம்பர் லாட்டரி தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் புது வைத்தியநாதன் தெருவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் உள்பட 4 பேர் சேர்ந்து செல்போனில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி ரகசியமாக மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

    இது தொடர்பாக கொருக்குப்பேட்டை அண்ணா நகரைச் சேர்ந்த ரத்தினகுமார் (வயது 46) கொடுங்கையூர் தென்றல் நகரை சேர்ந்த வேலு (36). எழில் நகரைச் சேர்ந்த காந்தி குமார் (39) தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த முனுசாமி (38) ஆட்டோ டிரைவர்கள் ஆகிய 4 பேரை இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.

    வில்லியனூரில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால்பேட் பகுதியில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீஸ்காரர்கள் அமீதுஉசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு செல்போனில் பேசியபடி நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஸ்வத்தமன் (வயது24), முரளி (26), ராஜேஷ் ஆகியோர் என்பதும் இவர்கள் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    ×