search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
    X

    வில்லியனூரில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது

    வில்லியனூரில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால்பேட் பகுதியில் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்கப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீஸ்காரர்கள் அமீதுஉசேன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு செல்போனில் பேசியபடி நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அஸ்வத்தமன் (வயது24), முரளி (26), ராஜேஷ் ஆகியோர் என்பதும் இவர்கள் செல்போன் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.53 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×