என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் தர்ணா போராட்டம் செய்த சி.வி.சண்முகம் கைது
Byமாலை மலர்31 Aug 2021 7:30 AM GMT (Updated: 31 Aug 2021 7:30 AM GMT)
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
விழுப்புரம்:
அ.தி.மு.க. ஆட்சியின் போது விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கான மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
இதன் எதிரொலியாக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியின் போது விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிர்வாக செலவை குறைத்து வருகிறது. அதன்படி ஜெயலலிதா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் எதிரொலியாக விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனே போலீசார் சி.வி.சண்முகத்தை கைது செய்தனர். பின்னர் அவர் விழுப்புரம்-புதுவை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இதையும் படியுங்கள்... சுப்ரீம் கோர்ட்டில் முதல்முறையாக 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X