என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பம்பு செட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்10 Aug 2021 3:11 AM GMT (Updated: 10 Aug 2021 3:11 AM GMT)
புள்ளானேரி பகுதியை சேர்ந்த சிவாஜி, தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பல்வேறு கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டிலிருந்து வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் புள்ளானேரி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சிவாஜி (வயது 38) என்பதும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பல்வேறு கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.
பம்புசெட்டில் நடத்திய சோதனையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்து சிவாஜியை கைது செய்தனர். இதன் மதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டிலிருந்து வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். போலீசார் அந்த வாலிபரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் புள்ளானேரி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சிவாஜி (வயது 38) என்பதும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பல்வேறு கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.
பம்புசெட்டில் நடத்திய சோதனையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்ததை போலீசார் பறிமுதல் செய்து சிவாஜியை கைது செய்தனர். இதன் மதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X