search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தென்தாமரைகுளம் அருகே சளிக்கு ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்து மாணவி மரணம்

    தென்தாமரைகுளம் அருகே சளிக்கு ஆவி பிடிக்கும் போது மயங்கி விழுந்து மாணவி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்தாமரைகுளம்:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள குமாரப் பெருமாள் விளையை சார்ந்தவர் சாம்பெனடிக். இவரது மகள் அக்சயா ஜென்சி (14). அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

    அக்சயா ஜென்சி ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி ஆவி பிடிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ஆஸ்துமா நோய்க்கு அவருடைய பெற்றோர்கள் அக்சயாவுக்கு ஆவி பிடிக்க செய்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மாணவி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவியை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×