என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடங்குளம் அருகே இன்று அதிகாலை படகு கவிழ்ந்து மீனவர் பலி
Byமாலை மலர்15 July 2021 9:36 AM GMT (Updated: 15 July 2021 9:36 AM GMT)
ராயப்பன் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற ராயப்பன், வில்லியம், ரவி ஆகியோர் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராயப்பன்(வயது 64). இவரது மகன் வில்லியம்(38). இவர்கள் 2 பேரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை தந்தை-மகன் 2 பேரும் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ரவி(50) என்பவரும் சென்றார். இடிந்தகரையை சேர்ந்த சக மீனவர்களும் மீன் பிடிக்க தனித்தனி படகில் சென்றனர்.
கடலில் அலை அதிகமாக இருந்ததால், மீனவர்கள் செல்ல முடியாமல் சென்றுள்ளனர். அப்போது ராயப்பன் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற ராயப்பன், வில்லியம், ரவி ஆகியோர் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதனை அவர்களுடன் மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள் பார்த்து விரைந்து சென்று 3 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் ராயப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே ராயப்பன் உடலையும், மற்ற 2 பேரையும் மீனவர்கள் பைபர் படகில் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் ராயப்பன்(வயது 64). இவரது மகன் வில்லியம்(38). இவர்கள் 2 பேரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இன்று அதிகாலை தந்தை-மகன் 2 பேரும் பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த ரவி(50) என்பவரும் சென்றார். இடிந்தகரையை சேர்ந்த சக மீனவர்களும் மீன் பிடிக்க தனித்தனி படகில் சென்றனர்.
கடலில் அலை அதிகமாக இருந்ததால், மீனவர்கள் செல்ல முடியாமல் சென்றுள்ளனர். அப்போது ராயப்பன் சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதில் படகில் சென்ற ராயப்பன், வில்லியம், ரவி ஆகியோர் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
இதனை அவர்களுடன் மற்ற படகுகளில் சென்ற மீனவர்கள் பார்த்து விரைந்து சென்று 3 பேரையும் மீட்டனர். ஆனால் அதற்குள் ராயப்பன் பரிதாபமாக இறந்துவிட்டார். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே ராயப்பன் உடலையும், மற்ற 2 பேரையும் மீனவர்கள் பைபர் படகில் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் கடலோர காவல்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X