search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு கவிழ்ந்தது"

    • கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
    • ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் சின்ன குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் (வயது 21). மீனவர். இவர் உறவினர்களான நரேஷ், சுரேந்தர் ஆகியோருடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    கடந்த சில நாட்களாக மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் கடலில் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ராட்சத அலையில் சிக்கி மீனவர் நரேந்தர் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. இதில் நரேந்தரின் தலையில் படகின் என்ஜின் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    உடன் இருந்தவர்கள் மீண்டும் படகை இயக்கி உயிருக்கு போராடிய நரேந்தரை மீட்டு கரைக்கு வந்தனர். பின்னர் நரேந்தரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர்.
    • மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது52). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். அந்த படகில் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து படகின் உரிமையாளரான ஆரோக்கியம், ஆன்றோ(47) உள்பட 16 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கன்னியாகுமரி கிழக்கு கடல் பகுதியான உவரி பகுதியில் அவர்களது படகு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சூறைக்காற்று வீசியது.

    இதனால் ராட்சத அலையில் சிக்கி அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 16 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் அனைவரும் தத்தளித்தபடி கிடந்தனர். இதனை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பார்த்தனர்.

    அவர்கள் கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர். ஆன்றோ, பையாஸ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மாயமாகினர். அவர்களை கடலில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீட்கப்பட்ட 13 மீனவர்களை தங்களது படகிலேயே கரைக்கு அழைத்து வந்தனர்.

    கடலில் 3 மீனவர்கள் விழுந்து மாயமானது. குறித்து குளச்சல் விசைப்படகு சங்கம், மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரின் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.

    மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.

    இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
    • சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.

    பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.

    ×