search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fishermen missing"

    • நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
    • படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்தவர் செல்ல குஞ்சு. இவருக்கு சொந்தமான பைபர் படகில் இவரது மகன் ரகு (வயது 30), சேவாபாரதியை சேர்ந்த சக்திவேல் (45), மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு மடவமேடு வடக்கு தெருவை சேர்ந்த விக்கி (18) ஆகிய 3 பேர் நேற்று நள்ளிரவு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 5 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதில் கடலில் படகு கவிழ்ந்தது.

    இதில் ரகு உள்பட 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சிறிது நேரத்தில் ரகு மூழ்கி மாயமானார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மற்றொரு பைபர் படகில் சக்திவேல், விக்கி ஆகியோரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம் படகு மூழ்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கடலோர காவல்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ரகுவை கீச்சாங்குப்பம் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரகு கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. புயல் சின்னம், தொடர் மழையால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை கோட்டைப்பட்டினம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த மணிமுத்து (வயது 45), கணேசன் ஆகிய இருவரும் அனுமதி பெறாமல் பதிவு செய்யப்படாத நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் காற்றின் வேகம் திடீரென்று அதிகரித்தது. இதில் நாட்டுப்படகு அலைக்கழிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தலைகுப்புற படகு கவிழ்ந்தது. அதிலிருந்து தவறி விழுந்த மீனவர்கள் இருவரும் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    இதைப்பார்த்த அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து வந்து கணேசனை பத்திரமாக மீட்டனர். ஆனால் மணிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து பல மணி நேரமாக அந்த பகுதி முழுவதும் தேடியும் எந்த தகவலும் இல்லை.

    இதையடுத்து மீட்கப்பட்ட மீனவருடன் கரை திரும்பியவர்கள், இதுபற்றி மற்ற மீனவர்களுக்கும், கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்று காலை 6 மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் கடலுக்கு சென்று மாயமான மீனவர் மணிமுத்துவை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஹாகீர் உசேன் (வயது 38).இவர் நேற்று காலை பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். பின்னர் மீண்டும் அவர் கரை திரும்பவில்லை. நேற்று மாலை அவர் வீடு திரும்பி இருக்க வேண்டும். 

    இது குறித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடலுக்கு சென்ற மீனவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் படகில் சென்ற போது டீசல் இல்லாமல் படகு நின்று விட்டதா? அல்லது ஏதாவது தொழில் நுட்ப காரணமா என விசாரணை நடந்து வருகிறது.
    தூத்துக்குடி கடலில் மாயமான‌ 18 மீனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Fishermenboat

    தூத்துக்குடி:

    தென்தமிழகத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும், கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. 2 நாட்களுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனால் பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பி உள்ளனர். தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மிக்கேல்ராஜ், ஜெகன், கில்பட், ஜோசப், குழந்தைராஜ், ராஜ், வல்லவன், வசந்த், ராமர் டால்வின் ஆகிய 10 பேரும், பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் விஜி, சுதாகர், அந்தோணி, விக்கி, அன்சாரி, செல்வராஜ், ஜோபின், எபிஸ்டன் ஆகிய 8 மீனவர்களும் கடந்த 1-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.


    புயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அவர்களை மற்ற மீனவர்கள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அந்த 2 படகுகளையும் நேற்று இரவு வரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் சற்று அதிக தொலைவு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், புயல் எச்சரிக்கை நேரத்தில் 18 மீனவர்கள் மாயமானது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர். பிற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிய நிலையில், இரண்டு படகுகளில் உள்ள 18 மீனவர்கள் மட்டும் இன்னமும் திரும்பி வராதது தங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் படகுகளை தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்வளத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து தூத்துக்குடி கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் ரோந்து கப்பலில் சென்று மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 5 நாட்களாக கடலில் இருக்கும் 18 மீனவர்கள் கதி என்ன? எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Fishermenboat

    ×