search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fisherman death"

    மரக்காணம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடல் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 38). மீனவர்.

    அதே பகுதியை சேர்ந்த மதிவாணன், சுப்பிரமணி, மண்ணாங்கட்டி ஆகியோர் ஒரு பைபர் படகில் கடந்த 6-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துவிட்டு மறுநாள் காலை அவர்கள் கரைதிரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் அதிகம் காணப்பட்டது. இதில் படகில் இருந்து மண்ணாங்கட்டி தடுமாறி கடலில் விழுந்தார்.

    கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் மண்ணாங் கட்டியை மீட்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து மதிவாணன், சுப்பிரமணியன் ஆகியோரை கரை திரும்பினர். பின்பு அவர்கள் மரக்காணம் போலீசில் புகார் செய்தனர். புகாரில் கடல் அலையில் மண்ணாங்கட்டி சிக்கிவிட்டார். அவரை மீட்கவேண்டும் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மீனவர்கள் மண்ணாங்கட்டியை தேடி சென்றனர். அப்போது கோமுட்டி சாவடி கடற்கரையில் மண்ணாங்கட்டி பிணமாக கிடந்தார். பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடல் அலையில் சிக்கி இறந்த மீனவர் மண்ணாங்கட்டிக்கு சரவணன் என்ற மகனும், லாவன்யா, நிவேதா ஆகிய மகள்களும் உள்ளனர்.

    இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது, விமான நிலையத்தில் அவரது உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

    திருச்சி:

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள இலந்தைகூட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 68). மீனவரான இவர் கடந்த 12-ந்தேதி 4 பேருடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.

    இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அதே பகுதியில் மேலும் சில படகுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்ததோடு, தங்களது கப்பலால் படகுகளில் மோதினர்.

    மேலும் படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக்கொண்டனர். முன்னதாக இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மோதியதில் முனியசாமியின் படகில் இருந்த அவர் உள்பட 4 பேரும் கடலில் விழுந்தனர்.

    கடலில் தத்தளித்த மற்ற 3 பேரையும் மீட்ட இலங்கை கடற்படையினர் முனியசாமியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே மீட்கப்பட்ட 3 பேரையும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாயமான மீனவர் முனியசாமியை தொடர்ந்து தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அறிந்த முனியசாமியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். முனுசாமியை எப்படியாவது கண்டுபிடித்து தரவேண்டும் என்று அவர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் முனியசாமியின் உடல் நேற்று முன்தினம் அங்குள்ள கடற்கரையில் ஒதுங்கியது. அதனை மீட்ட இலங்கை அரசு பிரேத பரிசோதனை செய்தது. இது பற்றி தமிழக அரசுக்கும் தகவல் தெரிவித்தது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

    அதன்படி இலங்கையில் இருந்து மீனவர் முனியசாமியின் உடல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மீனவரின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது.

    இறந்த மீனவர் முனியசாமிக்கு முனீஸ்வரி, சண்முகபிரியா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முனீஸ்வரி திருமணமாகி தனது கணவருடன் அந்தமானிலும், சண்முகபிரியா தனது கணவர் சண்முகநாதனுடன் உள்ளூரிலும் வசித்து வருகிறார்கள். மனைவி பூங்கோதை ஏற்கனவே இறந்துவிட்டார்.

    பழவேற்காடு கடலில் படகு கவிழ்ந்து மீனவர் நசிருதீன் கடலில் மூழ்கி பலியானார். முகமதுஅலி, அஷ்ரப்அலி, சாகுல்அமீது ஆகியோரை மற்ற மீனவர்கள் மீட்டனர்.
    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த கோட்டை குப்பம், ஜமிலா பாத்தை சேர்ந்தவர் நசிருதீன் (32). இன்று அதிகாலை அவர் அதே பகுதியை சேர்ந்த முகமது அலி, அஷ்ரப், சாகுல் அமீது ஆகியோருடன் படகில் பழவேற்காடு கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார்.

    முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. இதில் நசிருதீன் கடலில் மூழ்கி பலியானார். முகமதுஅலி, அஷ்ரப்அலி, சாகுல்அமீது ஆகியோரை மற்ற மீனவர்கள் மீட்டனர்.

    தூண்டில் போட்டு மீன்பிடித்த படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கடலில் மூழ்கி பலியானார்.
    மணவாளக்குறிச்சி:

    குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்(வயது34). மீனவர். தினேஷ் நேற்று மாலை முட்டத்தில் உள்ள மீன்பிடி துறை முகத்திற்கு சென்றார். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் இருந்தபடி கடலில் தூண்டில் போட்டு மீன் பிடித்தார். அப்போது எதிர் பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்தார். தினேசின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கடலில் விழுந்த தினேசை மீட்க முயன்றனர்.

    அதற்குள் தினேஷ் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது பற்றி குளச்சல் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×