search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவாரூரில் கஞ்சா கடத்தியதாக 3 பேர் கைது- ¾ கிலோ கஞ்சா பறிமுதல்

    கஞ்சா கடத்தியதாக 3 பேரை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக திருவாரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அலிவலம் ரோட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்களை போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் ¾ கிலோ கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவாரூர் அழகிரி காலனியை சேர்ந்த ராஜா என்ற காசிலிங்கம்(வயது 25), ஸ்டாலின்(34), சுந்தரவளாகத்தை சேர்ந்த சிவசங்கர்(22) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×