search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளி தற்கொலை

    வெள்ளிச்சந்தை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    வெள்ளிச்சந்தை அருகே ஈத்தன்காடை சேர்ந்தவர் தவசிலிங்கம் (வயது 44),தொழிலாளி. அப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு செல்லம்மாள்(40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவசிலிங்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தவசிலிங்கம் பூசாரியாக வேலை பார்க்கும் கோவிலின் அருகில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி செல்லம்மாள் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×