என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலம் அருகே பெண் கொலை
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் அருகே உள்ள எஸ். மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி லீலாவதி.இவர்களுக்கு 2 மகளும், ஜெயக்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாரியப்பன் இறந்து விட்டார்.
ஜெயக்குமார் கூலி வேலை செய்து வருகிறார். தந்தை இறந்த பிறகு சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தாய் லீலாவதியிடம் மகன் தகராறு செய்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் சொத்துக்களை பிரித்து தருமாறு தாய் லீலாவதியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதனால் தாய்-மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஜெயக்குமார் வீட்டின் வெளியே இருந்த கல்லை எடுத்து தாய் லீலாவதி தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த லீலாவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மகன் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்து பிரச்சினையில் பெற்ற தாயை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்