search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ராசிபுரம் அருகே லாரியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலி

    ராசிபுரம் அருகே லாரியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் 8-வது வார்டு இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலையில் ராசிபுரம் அருகேயுள்ள குட்டலாடம்பட்டி நியாய விலை கடையில் லோடு இறக்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் அங்குள்ள கடையில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு மீண்டும் லாரியில் ஏறி தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் போட்டு லாரியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராசிபுரம் போலீசார் விரைந்து சென்று செல்வராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன செல்வராஜுக்கு லட்சுமி (50) என்ற மனைவியும், பழனிச்சாமி (28), விஜி (25), அஜீத் (20), சீனிவாசன் (15) என்ற 4 மகன்களும், நித்தியா (24) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
    Next Story
    ×