search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    திருவையாறு அருகே மின் வயரில் ஈரத்துணியை காயப் போட்ட மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி

    திருவையாறு அருகே மின் வயரில் ஈரத்துணியை காயப் போட்ட மூதாட்டி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே இஞ்சிக்கொல்லை கிராமத்தைச் சார்ந்தவர் இந்திரா (55). விவசாயி. விதவை. நேற்றிரவு 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் குளித்துவிட்டு, வீட்டிலிருந்து தோட்டத்திற்குச் செல்லும் ஒரு மின் வயரின் மேல் ஈரத்துணியை காயப்போட்டதால் வயரிலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

    தகவலறிந்த திருவையாறு போலீசார் சிய்வ இடத்திற்கு விரைந்து சென்று இந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இதுகுறித்து இந்திராவின் மகன் பிரகாஷ் (27) கொடுத்த புகாரின் பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×