search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1¼ கோடியை கடந்தது

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 49 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 2,018 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 115 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    அந்தவகையில் நேற்று இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 4 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 26 ஆயிரத்து 313 முதியவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள் 902 பேருக்கும், முன்கள பணியாளர்கள் 2,211 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 271 பேருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 26 லட்சத்து 49 ஆயிரத்து 762 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.


    Next Story
    ×