search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 30 சோதனை சாவடிகள்- கலெக்டர் தகவல்

    கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள 12 சோதனை சாவடிகளுடன் தற்போது, கூடுதலாக 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் சமீரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்று பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.

    பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளார். அதன்படி, தளர்வுகளுடன் இயங்கும் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் மளிகை கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைந்து கண்டறிய விரைவாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் மீன்மார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் கூடாமல் கண்காணிக்கவும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளிஆட்கள் யாரும் உள்ளே வராமலும், தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லமால் இருப்பதையும் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்திடவேண்டும்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்று தொடர்பாக ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், தொழிற்சாலைகளில் பணி புரியும் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பணியினை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்த வேண்டும். கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள 12 சோதனை சாவடிகளுடன் தற்போது, கூடுதலாக 30 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக பகுதிகளின் அருகில் உள்ள நகர பகுதிகள், மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தவேண்டும்.

    கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது மக்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில்செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். திருமணம், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×