என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் 9 கடைகளுக்கு சீல்
Byமாலை மலர்19 Jun 2021 10:37 AM GMT (Updated: 19 Jun 2021 10:37 AM GMT)
நாமக்கல் கடைவீதி, டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறந்த டீக்கடைகள் உள்பட 9 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
நாமக்கல்:
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தாலும் நோய்த்தொற்று அதிகம் உள்ள நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மளிகை, இறைச்சி மற்றும் காய்கறி கடைகள் மதியம் 1 மணி வரை மட்டும் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாமக்கல் நகரில் பல்வேறு பகுதியில் அரசின் கட்டுபாடுகளை மீறி சில கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று நாமக்கல்லில் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம், துப்புரவு அலுவலர் சுகவனம் மற்றும் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நாமக்கல் கடைவீதி, டாக்டர் சங்கரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி திறந்த டீக்கடைகள் உள்பட 9 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X