என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்19 Jun 2021 10:26 AM GMT (Updated: 19 Jun 2021 10:26 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக முகாம்கள் நடைபெறும் இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 23 இடங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முன்னதாக முகாம்கள் நடைபெறும் இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக நாமக்கல் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும், முதலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 டோஸ் தடுப்பூசிகளும், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தந்த சுகாதார நிலையங்களின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்டதை காணமுடிந்தது. இதனிடையே மாவட்டத்தில் 23 இடங்களில் நடந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் 200 பேர் உள்பட 4,280 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X