search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைக்கு சீல்
    X
    கடைக்கு சீல்

    திருச்சிற்றம்பலத்தில் விதிகளை மீறிய ஜவுளி கடைக்கு சீல் வைப்பு

    திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடை விதி முறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டு அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பட்டுக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் கொரானா விதிமுறைகள் கடைவீதியில் முழுமையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

    அப்பொழுது திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடை விதி முறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டு அந்த கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள இரண்டு தேநீர் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆய்வின்போது மண்டல துணைத் தாசில்தார் ராஜ்குமாருடன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×