search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மேலும் ஒருவர் கைது

    டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரம்:

    ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 6-ந் தேதி இந்த கடையில் ரூ.48 ஆயிரத்து 100 மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்தமிழ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×