search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைகளுக்கு சீல்
    X
    கடைகளுக்கு சீல்

    ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல்

    பரமத்திவேலூர், பாண்டமங்கலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ‌2 டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாண்டமங்கலத்தில் ஒரு இரும்பு பெயிண்டு கடை செயல்பட்டு வருவதாக பரமத்திவேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், பரமத்திவேலூர் தாசில்தார் சுந்தரவல்லி ஆகியோர் உத்தரவுப்படி பரமத்திவேலூர்‌ போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் ஷோபனா, வேலூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வக்குமார், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ ஆகியோர் அந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் ஒரு இரும்பு பெயிண்டு கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மேலும் கடை ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×