என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
Byமாலை மலர்14 Jun 2021 2:28 AM GMT (Updated: 14 Jun 2021 2:28 AM GMT)
நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாள்தோறும் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது 3-வது அலை தாக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என யூகங்கள் எழுந்துள்ளன. எனவே, குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை இல்லாத நிலையை அரசு உருவாக்கி, பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாள்தோறும் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தற்போது 3-வது அலை தாக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என யூகங்கள் எழுந்துள்ளன. எனவே, குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பெற்றோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி பற்றாக்குறை இல்லாத நிலையை அரசு உருவாக்கி, பல்வேறு இடங்களில் முகாம்களை அமைத்து பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X