என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-1 நுழைவுத்தேர்வு ரத்துக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
Byமாலை மலர்10 Jun 2021 3:40 AM GMT (Updated: 10 Jun 2021 3:40 AM GMT)
2019-2020 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும்? என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 11-ம் வகுப்பு (பிளஸ்-1) மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. பா.ம.க. சுட்டிக்காட்டிய தவறை தமிழக அரசு சரி செய்திருக்கிறது. மாணவர் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்
2019-2020 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும்? என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரபூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது. அவர்களுக்கு அதிகாரபூர்வ மதிப்பெண் பட்டியல் வழங்க அரசு ஆணையிட வேண்டும். இவை அனைத்தையும் முடித்து ஜூன் 3-வது வாரத்துக்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 11-ம் வகுப்பு (பிளஸ்-1) மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை. பா.ம.க. சுட்டிக்காட்டிய தவறை தமிழக அரசு சரி செய்திருக்கிறது. மாணவர் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். 9-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்
2019-2020 கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் நடத்தப்பட்ட எந்தெந்த தேர்வுகளின் மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும்? என்பது குறித்து தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் படித்து மேல்நிலைப்பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் அதிகாரபூர்வ மதிப்பெண் பட்டியல் இருக்காது. அவர்களுக்கு அதிகாரபூர்வ மதிப்பெண் பட்டியல் வழங்க அரசு ஆணையிட வேண்டும். இவை அனைத்தையும் முடித்து ஜூன் 3-வது வாரத்துக்குள் வகுப்புகளை தொடங்குவது சாத்தியமில்லை என்பதால், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை சில வாரங்களுக்கு தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X