search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சிவகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

    சிவகிரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ள டி.ராமநாதபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 51), கூலித்தொழிலாளி.

    இவர் ராமநாதபுரம் மங்கம்மா சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் புளியம் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வாசுதேவ நல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×