என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிகளை மீறிய 354 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்31 May 2021 12:04 PM GMT (Updated: 31 May 2021 12:04 PM GMT)
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசங்கள் அணியாமல் பொதுஇடங்களில் சென்ற 266 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களுக்கு ரூ.53,200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகன விதிமீறல் தொடர்பாக 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ரூ.94,200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் விதிகளை மீறி வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 430 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X