என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா ஊரடங்கை மீறிய 185 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்31 May 2021 11:04 AM GMT (Updated: 31 May 2021 11:04 AM GMT)
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 185 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வில்லாத ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாத 135 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக மொத்தம் ரூ.27 ஆயிரம், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத வகையில் 12 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.6 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
மேலும், ஊரடங்கு காலத்தில் வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்கள் மீது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தாக 9 பேர் கைது செய்யப்பட்டு, 257 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் ஊரடங்கை மீறியதாக 185 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X