search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மெலட்டூர் அருகே ராணுவீரர்கள் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

    மெலட்டூர் அருகே ராணுவீரர்கள் வீட்டில் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் அருகே உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கபாலீஸ்வரன்.பிரகதீஷ்வரன். ராணுவ வீரர்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    விடுமுறையில் ஊர் திரும்பிய நிலையில் சம்பவத்தன்று இரவு பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், 90 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஆகியோர் மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எஸ்.பி. உத்தரவின்பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் முத்துகுமார் கொண்ட தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15- ந்தேதி திட்டை அருகே வாகன சோதனையில் இரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதி ராஜ் (24), சக்திவேல்(28), சிவா(27), முருகன்(45), மாரியப்பன்(46) என்பது தெரியவந்தது

    5 பேரும் ராணுவ வீராகள் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்ததையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    நகைகளையும் மீட்டனர். பின்னர் தஞ்சை ஜெ.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தனிப்படை போலீசாரை எஸ்.பி. பாராட்டினர்.

    Next Story
    ×