என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
20 இடங்கள் எதிர்பார்த்தோம்: 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது: பாமக தலைவர் ஜி.கே. மணி
Byமாலை மலர்11 May 2021 10:20 AM GMT (Updated: 11 May 2021 2:28 PM GMT)
பா.ம.க. தோல்விக்கும், அதிமுக கூட்டணி தோல்விக்கும் இட ஒதுக்கீடு காரணம் இல்லை என பாமக தலைவர் ஜி.கே மணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாமக, பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டன. தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாமக 23 இடங்களில் போட்டியிட்டு ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜனதா 20 இடங்களில் போட்டியிட்டு நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிமுக கூட்டணியின் தோல்விக்கு வன்னியர் உள்ஒதுக்கீடும், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததும்தான் முக்கிய காரணம் என வெளிப்படையாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே. மணி ‘‘நாங்கள் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்தோம், ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. பாமக, அதிமுக கூட்டணி தோல்விக்கு வன்னியர் உள்ஒதுக்கீடு காரணம் அல்ல’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X