என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 8½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பி.வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி சிவலட்சுமி (வயது 31).
இவர் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் பாதுகாப்பு மண்டல ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
சிவலட்சுமி நேற்று இரவு திருமங்கலம்-வாகைகுளம் ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது கண்ணன் நகர் பகுதியில் பின்னால் மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி சிவலட்சுமி சென்ற மொபட்டை திடீர் என தித்து கீழே தள்ளினார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டான்.
இதில் படுகாயம் அடைந்த சிவலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சிவலட்சுமி தரப்பில் சிந்து பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து சிவலட்சுமியிடம் 8½ பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றவர், 30 வயதுக்குட்பட்ட வாலிபர் என்பது தெரிய வந்தது.
சிந்துபட்டி போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்