என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு
Byமாலை மலர்10 May 2021 3:01 PM GMT (Updated: 10 May 2021 3:01 PM GMT)
திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரை அடுத்த தேங்காய்ஜிட்டி குருமன்ஸ் வட்டம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரவேலு (வயது 30). இவரின் மனைவி விஜி (25). சுந்தரவேலு ஓசூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரின் மனைவிக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் விஜி வீட்டை பூட்டி விட்டு விஷமங்கலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார்.
அவரின் வீட்டுக்கு வந்த மர்மநபர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவின் பூட்டை உடைத்து, அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.50, 2 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார்.
ஓசூரில் இருந்து ஊருக்கு வந்த சுந்தரவேலு வீட்டுக் கதவு, பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பணம், நகை திருட்டுப் போனது குறித்து கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X