என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு
Byமாலை மலர்9 May 2021 11:19 AM GMT (Updated: 9 May 2021 11:19 AM GMT)
தமிழகத்தில் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கட்சியின் தோர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் மாநில தலைவர் எல்முருகன் பேசுகையில், சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்றார்.
‘ஆளுங்கட்சிக்கு ஆலோசனை வழங்கவும் பாஜக தயார். அதேசமயம், தவறுகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள். தற்போது தாமரை மலர்ந்துள்ளது’ என எல்.முருகன் கூறினார்.
நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X