என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த விவசாயி கிணற்றில் மூழ்கி பலி
கருமத்தம்பட்டி:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மான்டம்பாளையம் புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). விவசாயி.சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் இருந்த போது அவரது மகன் தனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்குமாறு கூறினார். இதனையடுத்து செந்தில்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்ட அவர் நீரில் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்