search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓமலூர் அருகே தம்பதி மீது மிளகாய் பொடியை தூவி நகையை பறிக்க முயற்சி- 3 பேர் கைது

    மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த தம்பதி மீது மிளகாய் பொடியை தூவி நகையை பறிக்க முயன்ற 3 பேரை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    ஓமலூர்:

    ஓமலூர் அருகே டேனிஸ்பேட்டை பிராஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). தொழிலாளி. இவருடைய மனைவி சண்முகவள்ளி (42). இந்த நிலையில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சேலம் சென்றுவிட்டு திரும்ப குருவம்பட்டி டேனிஸ்பேட்டை மலைப்பாதை வழியாக காஞ்சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அத்தி மாரியம்மன் கோவில் அருகே வரும் போது பின் தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் வழிமறித்து அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவினா்.

    மேலும் சண்முகவள்ளி கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட முருகேசன் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். 

    இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த வேலு (28), சேலம் கோரிமேடு ஏ.டி.சி. நகரை சேர்ந்த முரளி (20), சேலம் அஸ்தம்பட்டி சடையாகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பகுதியில் இவர்கள் 3 பேரும் ஆடுகளை திருடினார்களா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×