என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வெறும் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற ரெயில்
Byமாலை மலர்22 April 2021 3:19 AM GMT (Updated: 22 April 2021 3:19 AM GMT)
கொரோனா அச்சம் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வெறும் 30 பயணிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது.
விழுப்புரம்:
இந்நிலையில் விழுப்புரம்- புருலியா இடையே ஏப்ரல் 21-ந் தேதி முதல் வாரந்தோறும் புதன், சனிக்கிழமை வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்தது. அதன்படி நேற்று பகல் 12 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புருலியாவிற்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் 12 பெட்டிகளுடன் புறப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் தாக்கத்தின் அச்சம் காரணமாக பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.
இந்த ரெயிலில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து 30 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் விழுப்புரம்- புருலியா இடையே ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அந்த சமயத்தில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிற நிலையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளதால் எந்தவித பயனும் இல்லை. கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வெளியூர் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்’ என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X