என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அருகே தென்னைமரம் வெட்டுவதில் தகராறு- முதியவர் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்18 April 2021 9:29 AM GMT (Updated: 18 April 2021 9:29 AM GMT)
பாபநாசம் அருகே தென்னைமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே அரையபுரம் தட்டு மால் படுகை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 72) விவசாயி, இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூர்யா (23). சூர்யாவுக்கு சொந்தமான தென்னைமரம் நடராஜன் வீட்டு மேல் மாடியில் சாய்ந்த நிலையில் வளர்ந்து தேங்காய், மட்டை விழுந்துள்ளது.
இந்த மரத்தை வெட்ட சொல்லி நடராஜன் கூறியுள்ளார். அதற்கு சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நடராஜனுக்கு, சூர்யா கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து பாபநாசம் போலீசில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குப்பதிவு செய்து சூர்யா, நடராஜன் மற்றும் ரமேஷ் (28) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X