என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடிகர் விவேக் மறைவு- ரசிகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி
Byமாலை மலர்17 April 2021 5:26 AM GMT (Updated: 17 April 2021 5:26 AM GMT)
நடிகர் விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ரசிகர்கள் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
சென்னை:
நடிகர் விவேக் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
நடிகர் விவேக் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் வசிக்கும் பகுதியில் மக்களிடம் நன்கு நெருங்கி பழகக்கூடியவர். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருமே விவேக் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
விவேக் மறைவு தகவல் கேட்டு அவர்கள் மிகுந்த துயரம் அடைந்தனர். விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தபடியும், முக கவசம் அணிந்தபடியும் அவர் வசித்த தெருவில் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
ஒருவர் பின் ஒருவராக சென்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல் விவேக்கின் ரசிகர்களும் இன்று காலையிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். அவர்களும் வரிசையில் காத்திருந்து விவேக் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர் விவேக் மறைவு குறித்த செய்தி அறிந்ததும் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
நடிகர் விவேக் சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் வசிக்கும் பகுதியில் மக்களிடம் நன்கு நெருங்கி பழகக்கூடியவர். இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருமே விவேக் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
விவேக் மறைவு தகவல் கேட்டு அவர்கள் மிகுந்த துயரம் அடைந்தனர். விவேக் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி வைக்கப்பட்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டனர்.
அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்துமாறு கூறினார்கள்.
இதையடுத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தபடியும், முக கவசம் அணிந்தபடியும் அவர் வசித்த தெருவில் நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள்.
ஒருவர் பின் ஒருவராக சென்று விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல் விவேக்கின் ரசிகர்களும் இன்று காலையிலேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரண்டனர். அவர்களும் வரிசையில் காத்திருந்து விவேக் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X