search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    பா.ம.க. மீது பழி சுமத்தியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் - ராமதாஸ் அறிக்கை

    அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தையடுத்த சோகனூர் பகுதியில் நடைபெற்ற மோதலில் இருவர் கொல்லப்பட்ட நிகழ்வில் பா.ம.க.வுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிசிவகாமி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு அறிவித்திருக்கிறது.

    உண்மைகளை புதைப்பதால் மறைத்து விட முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    அரக்கோணம் நிகழ்வில் கொல்லப்பட்ட இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை; அவர்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு கேட்கவும் இல்லை; இந்தக் கொடிய படுகொலைகளின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றும் உண்மை கண்டறியும் குழு கூறியிருக்கிறது.

    கோப்புபடம்

    இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் தொடக்கத்திலிருந்தே கூறி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் சரியானது என்பதை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை நிரூபித்துள்ளது.

    அரக்கோணம் படு கொலையில் பா.ம.க.வைச் சேர்ந்த எவருக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத்தான் தொடக்கம் முதலே நான் கூறி வந்தேன். ஆனால், பா.ம.க.வுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத இப்படுகொலைகளில் பா.ம.க.வை சம்பந்தப்படுத்தி சில சில்லரை கட்சிகள் அவதூறு பரப்பின.

    பா.ம.க.எந்த வகையிலும் தொடர்பு இல்லை என உண்மை கண்டறியும் குழு கூறி விட்ட நிலையில், பா.ம.க. மீது அவதூறு பழிகளை சுமத்திய பாவிகள் என்ன செய்யப்போகிறார்கள்?

    மு.க.ஸ்டாலினுக்கும், அவரது கூட்டாளி தலைவர்களுக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அது அவர்களை உறுத்தும்; தாங்கள் செய்த தவறுக்காக பா.ம.க.விடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்று தான். மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். அரசியல் லாபத்திற்காக மனசாட்சியை விற்று விடாதீர்கள் என்பது தான்.

    ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். அதற்கு தடையாக இருக்கும் சக்திகளை விரட்டி அடியுங்கள். இதை வைத்து இனியும் பிழைப்பு நடத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×