என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அரசாணை
Byமாலை மலர்12 April 2021 6:41 AM GMT (Updated: 12 April 2021 6:41 AM GMT)
நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் கலைகளுக்காக 2 ஆயிரத்து 780 கலைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதர நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிமுறைக்கு உட்பட்டு தகுதி உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண உதவி வழங்கப்படும்.
இதற்காக ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியே 20 ஆயிரம் நிதி தேவைப்படுவதாக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கோரி இருந்தார். இது ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை பதிவு செய்திருந்த நாட்டுப்புற கலைஞர்கள் 6 ஆயிரத்து 810 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் வழங்க தமிழக அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு நிர்வாக ஆணை வழங்கி அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நாதஸ்வரம், தெருக்கூத்து, தாளம் கலைகளுக்காக 2 ஆயிரத்து 780 கலைஞர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இதர நாட்டுப்புற கலைஞர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
மொத்தம் 6 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலித்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் விதிமுறைக்கு உட்பட்டு தகுதி உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண உதவி வழங்கப்படும்.
இதற்காக ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம் கோடியே 20 ஆயிரம் நிதி தேவைப்படுவதாக கலை பண்பாட்டு துறை இயக்குனர் கோரி இருந்தார். இது ஏற்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை பதிவு செய்திருந்த நாட்டுப்புற கலைஞர்கள் 6 ஆயிரத்து 810 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 1 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் வழங்க தமிழக அரசு கலை பண்பாட்டு துறை இயக்குனருக்கு நிர்வாக ஆணை வழங்கி அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X