என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமத்தி அருகே மளிகை கடையில் திருடியவர் கைது
Byமாலை மலர்5 April 2021 9:39 AM GMT (Updated: 5 April 2021 9:39 AM GMT)
பரமத்தி அருகே மளிகை கடையில் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மளிகை கடையை பூட்டி விட்டு பிரபு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது அவரது மளிகை கடை திறந்தும், கடையின் முன்பு வெளியில் ஸ்கூட்டர் ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மளிகை கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒருவர் கடைகுள் இருந்த மளிகை சாமான்களை திருடி கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக அந்த நபரை மடக்கி பிடித்து பிரபு பரமத்தி போலீசில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து பரமத்தி போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் திண்டுக்கல் மாவட்டம் குள்ளணம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (55) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்போது குமாரபாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X