என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்4 April 2021 2:41 PM GMT (Updated: 4 April 2021 2:41 PM GMT)
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளனர்.
வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர்பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு, அப்பர்லேக்வியூ, பைன்மரக்காடு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது. இதேபோல் நகர்ப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தனர்.
நேற்று பகலில் வெப்பம் நிலவிய நிலையில், மாலை 4 மணி முதல் மேக மூட்டங்கள் சூழ்ந்து இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் அங்கு வந்ததால், நகர்ப்பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து வனக்காவலர்களும், போலீசாரும் போக்குவரத்தை சீரமைத்தனர்.
சுற்றுலா பயணிகளின் வரத்து எதிரொலியாக, நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் தானியங்கி குடிதண்ணீர் எந்திரங்கள் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X