search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதிதாக 18 பேருக்கு தொற்று: மதுரையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

    மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.
    மதுரை:

    மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 15 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் நேற்று 24 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 18 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.

    இவர்களை தவிர 219 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதற்கிடையே, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 49 வயதுடைய நபர் இறந்து போனார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 463 ஆக உள்ளது.
    Next Story
    ×