search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    பாளை அருகே பூட்டிய வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளை

    பாளை அருகே பூட்டிய வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). கடந்த 19ந்தேதி கார்த்திகேயன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 வெள்ளி கொலுசுகள் மற்றும் குத்து விளக்கு திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திகேயன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×