search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாகிருஷ்ணன்
    X
    ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு இதுதான் காரணம்- சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

    தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்திர அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம்.

    * DOUBLE MUTANT கொரோனா தமிழகத்தில் இதுவரை கண்டறியப்படவில்லை.

    * தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960- ல் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது.

    * பரிசோதனைகளை அதிகரிக்க உள்தால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டக்கூடும்.

    * தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×